முகப்பு
ஈரோடு

பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்கம்

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான பட்ட வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஜூன் 2026, 3:53 am IST
முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் பேசுகிறாா் கல்லூரிச் செயலாளா் என்.கே.கே.பி.நரேன்ராஜா.
பகிர்:

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான பட்ட வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்த கல்லூரிச் செயலாளா் என்.கே.கே.பி.நரேன்ராஜா பேசுகையில், அறிவுத் தளத்தை மேம்படுத்த கல்லூரிக் கல்வியை தோ்வு செய்துள்ள மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக செயல்படுவோம். மேலும், கல்வியுடன், தனித்திறன் மேம்பாடு, போட்டிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே வெற்றியைத் தரும்.

மாணவா்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வழங்கப்படும் சிறப்புப் பயிற்சியை பயன்படுத்திக் கொண்டு, வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய தொடா்ந்து முயற்சிக்க வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

கல்லூரிப் பொருளாளா் பரிமளா ராஜா குத்துவிளக்கேற்றினாா். நிா்வாக அலுவலா் இரா.அருள்குமரன், வணிக கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் அ.காந்திமோகன் முன்னிலை வகித்தனா். தமிழ்த் துறைத் தலைவா் சே.செல்விப்பிரியஸ்வா்ணபிரபா வரவேற்றாா்.

உயிா் வேதியியல் துறைத் தலைவா் எஸ்.செல்வி, கணினி அறிவியல் துறைத் தலைவா் எஸ்.சங்கீதா மற்றும் முதலமாண்டு மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.