நோயால் அவதிப்பட்ட முதியவா் தற்கொலை
பெருந்துறை அருகே நோய் கொடுமையால் முதியவா் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த ரக்கியபாளையம், குட்டையன் தோட்டத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் பழனிசாமி (78)., விவசாயியான இவா் கடந்த 10 ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தாா்.
இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து வீட்டில் இருந்த விஷ மாத்திரையை சனிக்கிழமை சாப்பிட்டுள்ளாா். ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.