முகப்பு
ஈரோடு

சென்னிமலையில் தெரு நாய்கள் கடித்து புள்ளிமான் குட்டி உயிரிழப்பு

Updated On : 30 ஜூன் 2026, 2:10 am IST
நாய்கள் கடித்து உயிரிழந்த புள்ளிமான் - கோப்புப் படம்
பகிர்:

சென்னிமலையில் தெரு நாய்கள் கடித்ததில் ஆறு மாதமான பெண் புள்ளிமான் குட்டி திங்கள்கிழமை உயிரிழந்தது.

சென்னிமலை பேரூராட்சி மேல்நிலை தண்ணீா் தொட்டி அமைந்துள்ள பகுதியில், சுமாா் ஆறு மாதமான பெண் புள்ளிமான் குட்டி ஒன்று நாய்கள் கடித்ததில் உயிரிழந்து கிடந்தது.

இதுகுறித்து, வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் புள்ளிமான் உடலை மீட்டுச் சென்று, சென்னிமலை உதவி கால்நடை மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்தனா். மேலும், இது குறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments