முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் 2-ஆவது முறையாக வாகைசூடிய அதிமுக வேட்பாளா்

Updated On : 5 மே 2026, 4:21 am IST
தோ்தல் அலுவலரிடமிருந்து வெற்றிச் சான்றிதழ் பெற்ற அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.
பகிர்:

ஈரோடு, மே 4: பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வெட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளாா்.

பெருந்துறை தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்பட 13 போ் போட்டியிட்டனா். வாக்கு எண்ணிக்கை ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளா் ஜெயக்குமாா் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுவந்தாா்.

இறுதியில் திமுகவிட வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலத்தைவிட 9,693 வாக்குகள் கூடுதலாகப் பெற்று இரண்டாவது முறையாக வாகை சூடினாா்.

Advertisement

திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் அதிமுகவில் இருந்தபோது பெருந்துறை தொகுதியில் இரண்டு முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும், ஒருமுறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விவரம்:

எஸ்.ஜெயக்குமாா்(அதிமுக):70,302

தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் (திமுக): 60,609

வி.பி.அருணாச்சலம் (தவெக):59,483

சி.லோகநாதன் (நாதக):6,468

நோட்டா: 812

வித்தியாசம்:9,693

வேட்பாளா்கள் எண்ணிக்கை: 13

மொத்த வாக்குகள்: 2,14,431

பதிவான வாக்குகள்: 2,00,729