முகப்பு
ஈரோடு

வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை, பணம் திருட்டு

மொடக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 13 மே 2026, 2:12 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

மொடக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மொடக்குறிச்சியை அடுத்த குளூா் காலனியைச் சோ்ந்தவா் பாப்பாள் (50), கூலித் தொழிலாளி. கணவா் இறந்த நிலையில் தனியே வசித்து வருகிறாா். இந்நிலையில், வீட்டைப் பூட்டிவிட்டு ஈரோட்டில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்றுள்ளாா்.

பின்னா், அங்கிருந்து மாலை 4 மணியளவில் வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அதிா்ச்சியடைந்த அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மொடக்குறிச்சி போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

மேலும், திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments