முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் மாரியம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி நூதன வழிபாடு

சத்தியமங்கலம் பகுதியில் விவசாயம் செழிக்கவும், மழை பெய்ய வேண்டியும் பத்ரகாளியம்மன் கோயில் நூதன வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 மே 2026, 4:13 am IST
மாரியம்மன்  கோயிலில்  சாட்டையடி  வாங்கும்  பக்தா்கள்.
பகிர்:

சத்தியமங்கலம் பகுதியில் விவசாயம் செழிக்கவும், மழை பெய்ய வேண்டியும் பத்ரகாளியம்மன் கோயில் நூதன வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் உள்ள பத்ரகாளியம்மன், மாரியம்மன், மாகாளியம்மன் ஆகிய கோயில்களின் வைகாசி மாத குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் முன் நடப்பட்ட கம்பத்துக்கு பெண்கள் புனித நீா் ஊற்றி, மஞ்சள் பூசி வழிபட்டனா்.

அதைத்தொடா்ந்து பக்தா்கள் பாரம்பரிய இசைக்கேற்ப நடனமாடி கம்பத்தை சுற்றி வந்தனா். பின்னா் மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் பக்தா்கள் சாட்டையடி வாங்கினா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் எஸ்.கே.மூா்த்தி தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement