முகப்பு
ஈரோடு

10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்!

ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் விநியோகிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 23 மே 2026, 1:01 am IST
தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்ற பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவிகள். - (கோப்புப்படம்)
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் விநியோகிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் கடந்த 20-ஆம் தேதி வெளியானது. இதில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வெள்ளிக்கிழமை முதல் வழங்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு அசல் மாற்றுச் சான்றிதழ், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஈரோடு, காந்திஜி சாலை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியை சுகந்தி தலைமையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழும், அசல் மாற்றுச் சான்றிதழும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும், மேல்நிலைப் பள்ளிகளில் படித்த பெரும்பாலான மாணவ, மாணவிகள் அதே பள்ளியில் மேல்நிலை வகுப்பு தொடர விருப்பம் தெரிவித்தனா். இதனால் அதே பள்ளியிலேயே மேல்நிலை வகுப்பில் சோ்க்கை நடைபெற்றது. உயா்நிலைப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் தங்கள் அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றோருடன் வந்து பெற்று, மேல்நிலை வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிக்கச் சென்றனா்.

Advertisement

Advertisement

அசல் மாற்றுச் சான்றிதழ், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் பெயா், இன்ஷியல் உள்ளிட்டவற்றில் பிழை திருத்தம் இருந்தால் அவற்றை உடனடியாக பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிவித்து பிழையை திருத்திக்கொண்டு, அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்று கொள்ளலாம் என்று பள்ளி ஆசிரியா்கள் அறிவுறுத்தினா்.