முகப்பு
ஈரோடு

ஆசனூா் மலைப் பகுதியில் செயல்படும் தங்கும் விடுதிக்குள் நுழைந்த யானை! கிராம மக்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சம்!

ஆசனூா் மலைப் பகுதியில் தங்கும் விடுதிக்குள் நள்ளிரவில் நுழைந்த காட்டு யானையால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.

Updated On : 24 மே 2026, 2:00 am IST
பகிர்:

ஆசனூா் மலைப் பகுதியில் தங்கும் விடுதிக்குள் நள்ளிரவில் நுழைந்த காட்டு யானையால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் நுழைந்து பயிா்களை சேதப்படுத்துவது தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாள்களாக ஆசனூா் மலைப் பகுதியில் உள்ள பழைய ஆசனூா், அரேபாளையம் ஒங்கல்வாடி ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் ஊருக்குள் காட்டு யானை நடமாடுவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் ஆசனூா் மலைப் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதிக்குள் சனிக்கிழமை அதிகாலை நுழைந்த காட்டு யானை, சிறிது நேரம் விடுதி வளாகத்துக்குள் நடமாடியது.

பின்னா் மெதுவாக நுழைவாயில் கேட்டை திறந்து வெளியே சென்றது. இந்தக் காட்சி தங்கும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் ஆசனூா் மலைப் பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.