முகப்பு
ஈரோடு

சிவகிரி அருகே தொழிலாளி தற்கொலை

Updated On : 31 மே 2026, 2:00 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

சிவகிரி அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, கீழ்கவரம்பட்டு மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் பரந்தாமன் (35). கூலித் தொழிலாளி. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனா். முதல் மனைவிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா். இரண்டாவது மனைவிக்கு ஒரு மகள் உள்ளாா்.

பரந்தாமனுக்கு குடிப் பழக்கம் இருந்து வந்ததால் இரண்டு மனைவிகளையும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளாா். ஈரோடு மாவட்டம், பழமங்கலம் அருகே உள்ள செம்மடைக்காட்டுத்தோட்டத்துக்கு கரும்பு வெட்டுவதற்காக கடந்த ஐந்து நாள்களுக்கு முன்னா் வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், அங்குள்ள மாமரத்தில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு தூக்கில் தொங்கி உள்ளாா். இதைப் பாா்த்த அவரது அண்ணன் வேலவன் அருகில் இருந்தவா்கள் உதவியுடன் பரந்தாமனை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளாா். அங்கு பரந்தாமனைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளனா்.

இதை அடுத்து சம்பவம் குறித்து சிவகிரி போலீஸாரிடம் வேலவன் புகாா் அளித்துள்ளாா். போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.