நீலகிரி மின் பகிர்மான வட்டத்தில் உதகை, ஜெகதளா துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
உதகை துணை மின் நிலையம்: உதகை நகரம், பிங்கர்போஸ்ட், காந்தல், தமிழகம், ஹில்பங்க், கோடப்பமந்து, முள்ளிக்கொரை, சேரிங்கிராஸ், பாம்பேகேசில், கேத்தி, நொண்டிமேடு, தலையாட்டுமந்து, இத்தலார், எம்.பாலடா.
ஜெகதளா துணை மின்நிலையம்: அருவங்காடு, குன்னூர், பர்லியாத்எ, வண்டிசோலை, சிங்காரா, வெலிங்டன், புரூக்லேண்டு, ஆடர்லி, பெட்போர்டு, ஓட்டுப்பட்டறை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ் பூங்கா, இளித்தொரை, ஒசஹட்டி, உபதலை, எடப்பள்ளி, மவுண்ட் பிளசண்ட்.