குன்னூர் - உதகை சாலையில் ராட்சத மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
குன்னூர் - உதகை சாலையில் அருவங்காடு பகுதியில் புதன்கிழமை ராட்சத மரம் விழுந்ததில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூர் - உதகை சாலையில் அருவங்காடு பகுதியில் புதன்கிழமை ராட்சத மரம் விழுந்ததில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்தது.
இந்நிலையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் குறுக்கே செவ்வாய்க்கிழமை மரம் விழுந்ததால் குரும்பாடி, மரப்பாலம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீயணைப்புத் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், காவல் துறையினர் இணைந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இந்நிலையில், குன்னூர் - உதகை சாலையில் அருவங்காடு பகுதியில் ராட்சத மரம் புதன்கிழமை இரவு விழுந்தது. அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் வந்து மரத்தை வெட்டி அகற்றியப் பின் போக்குவரத்து சீரானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.