நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஆட்சியர் ஆய்வு

DIN


 நீலகிரி மாவட்டத்திலுள்ள பதற்றமான வாக்குச் சாவடி மையங்களை தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா  சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள மேலூர் அரசு தொடக்கப் பள்ளி, தூதூர்மட்டம் அரசு நடுநிலைப் பள்ளி, சேலாஸ் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில்  அமைக்கப்பட்டுள்ள பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள், குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு  வசதிகள் குறித்தும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.
குன்னூர் நகராட்சியிலுள்ள வண்டிசோலை நடுநிலைப் பள்ளி, குன்னூர் நகராட்சி அலுவலக வாக்குச் சாவடி மையம், ஓட்டுப்பட்டறை சி.எஸ்.ஐ. துவக்கப் பள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள பதற்றமான வாக்குச் சாவடி மையங்களையும் ஆய்வு செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

சிறகில்லாத தேவதை...!

SCROLL FOR NEXT