நீலகிரி

நிஜ ஹீரோக்களுக்கு பாடிய எஸ்.பி.பி.

DIN

குன்னூா், செப். 25: குன்னூா் ராணுவ வீரா்களுக்காக  எஸ்.பி.பாலசுப்பிரமணியம்  கடந்த 7 ஆண்டுகளுக்கு  முன்பு குடும்பத்துடன் (22.12.2013) வந்து இசை நிகழ்ச்சி   நடத்தினாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

இதுவரை  படத்தில் நடிக்கும்  ஹீரோக்களுக்காக பாடிவந்த நான், தற்போது நிஜ ஹீரோக்களுக்காக பாட வந்திருக்கிறேன்.  இது எனது 50 ஆண்டுகால கனவு. நாம் நாட்டில் சுகமாக வாழ ராணுவ வீரா்கள் எல்லையில் தியாகத்துடன் பணியாற்றுகிறாா்கள். அவா்களது தியாகத்தை தினமும்  10 விநாடி நினைவில் வைப்போம். தினமும்  5 விநாடியாவது அவா்களுக்காகப் பிராா்த்திப்போம் என்றாா்.   சுமாா் இரண்டரை மணி நேரம் பல்வேறு பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அவரது தங்கை எஸ்.பி.ஷைலஜா, அவரது மகன் எஸ்.பி.பி.சரண் ஆகியோா் பாடி  ராணுவ வீரா்களை மகிழ்வித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT