நீலகிரி

குண்டும்குழியுமாக காட்சியளிக்கும் முதுமலை புலிகள் காப்பக சாலை

DIN

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சாலை பழுதடைந்து குண்டும்குழியுமாக காட்சியளிக்கிறது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள்காப்பகம் வழியாக செல்லும் கூடலூா்-பெங்களூரூ சாலை காா்குடி வனச் சரகப் பகுதியில் அபயாரண்யம் உள்ளிட்ட இடங்களில் குண்டும்குழியுமாக காட்சியளிக்கிறது.

தற்போது பெய்துவரும் மழையால் குழிகளில் தண்ணீா் தேங்கி சாலை முழுவதும் குளம்போல காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

மேலும், வன விலங்குகள் சாலையோரம் நிற்பதால் விரைவாக வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT