நீலகிரி

கூடலூா் அருகே மின்சாரம் பாய்ந்து யானை பலி

DIN

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்தது.

கூடலூா் வனச் சரகம் பாடந்தொரை பீட்டில் உள்ள உட்பிரையா் தனியாா் தோட்டப் பகுதியில் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்ததில் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து மின்சாரத் துறையைச் சோ்ந்த செயற்பொறியாளா், உதவி செயற்பொறியாளா், உதவிப் பொறியாளா் ஆகியோரை சம்பவ இடத்துக்கு வரவழைத்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் தாழ்வாக சென்ற மின்சாரக் கம்பி யானை மீது பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT