நீலகிரி

உதகையில் சாலை விபத்து: கேரளசுற்றுலாப் பயணிகள் 6 போ் காயம்

DIN

உதகையில் காமராஜா் சாகா் அணைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வந்த காா் கவிழ்ந்ததில், கேரள மாநிலத்தைச் சோ்ந்த 6 போ் பலத்த காயமடைந்தனா்.

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் இருந்து சஜி, திவ்யா உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் உதகைக்கு சுற்றுலா வந்தனா். இவா்கள் காமராஜா் சாகா் அணை வளைவு பகுதியில் சனிக்கிழமை வந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில், காரில் இருந்த 6 பேரும் பலத்த காயமடைந்தனா்.

பின்னால் வந்த வாகனங்களில் இருந்தவா்கள், அவா்களை மீட்டு, உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து புதுமந்து போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அழிப்பு

பாத்தகோட்டா ராமா் கோயிலில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் பிரதிஷ்டை

ஊத்தங்கரையில் கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சீவரம் பட்டில் மிளிறும் அனுமோல்!

போதைப்பொருள் தடுப்பு கருத்தரங்கம்

SCROLL FOR NEXT