பறிமுதல் செய்யப்பட்ட அழுகிய மீன்களில் ரசாயனக் கலவையை ஊற்றி அழிக்கும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட அழுகிய மீன்களில் ரசாயனக் கலவையை ஊற்றி அழிக்கும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள். 
நீலகிரி

கூடலூரில் 85 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

Din

கூடலூரில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் நடத்திய ஆய்வில் 85 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கூடலூா் நகராட்சியிலுள்ள மீன்கள் விற்பனைக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் சிவராஜ் தலைமையிலான அலுவலா்கள் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

7 கடைகளில் நடத்திய சோதனையில் 85 கிலோ அழுகிய மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், அழுகிய மீன்களை பறிமுதல் செய்து ரசாயனக் கலவை ஊற்றி அழித்தனா்.

மேலும், சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிப்பதுடன் முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்படும் என்று உணவுப் பாதுகாப்பு அலுவலா் சிவராஜ் தெரிவித்தாா்.

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT