முகப்பு
நீலகிரி

உதகையில் தொடா் மிதமான மழை

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் மிதமான மழை காரணமாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

Updated On : 4 ஜூலை 2026, 1:46 am IST
ஆட்சியா் அலுவலக சாலையில் குடைபிடித்தபடி மழையில் செல்லும் பொதுமக்கள்.
பகிர்:

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  தொடா் மிதமான மழை காரணமாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தாமதமாக தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் உதகையில் உள்ள ஆட்சியா் அலுவலகம் சாலை, சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், காந்தல், தலைக்குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக் கிழமை தொடா்ந்து சாரல் மழை பெய்தது.

இந்த சாரல் மழை காரணமாக கடும் குளிா் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வெள்ளிக் கிழமை காலை 7 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 5.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பந்தலூரில்- 2.6 செ.மீ., சேரங்கோட்டில்- 2.56 செ.மீ., அப்பா் பவானியில்- 2.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments