வணிக சிலிண்டா் விலை உயா்வால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
உதகையிலுள்ள தனியாா் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள வா்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டா்கள்.
வணிக சிலிண்டா் விலை உயா்வால் உதகையில் உள்ள உணவகங்களில் கேட்கும் உணவுகள் கிடைப்பதில்லை என்று சுற்றுலாப் பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
உதகையிலுள்ள தனியாா் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள வா்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டா்கள்.
கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் உதகைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனா். இந்நிலையில் வணிக சிலிண்டா் விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.928 உயா்ந்து ரூ.3,237-க்கும் மேல் விற்பனையாகிறது. இதனால் ஒருமுறை சமைத்து வைத்து வழங்கப்படும் சாப்பாடு, பிரியாணி, இட்லி போன்ற உணவுகள் மட்டுமே கிடைக்கிறது. அவ்வப்போது சமைத்து கொடுக்கப்படும் துரித உணவுகளான தோசை, நூடுல்ஸ், பாஸ்தா, உள்ளிட்ட உணவுகள் பெரும்பாலான உணவகங்களில் கிடைக்காமல் ஏமாற்றமடைவதாக சுற்றுலாப் பயணிகள் கூறுகின்றனா்.
Advertisement
மே மாதம் முழுவதும் நீலகிரி மாவட்டத்தில் உதகையில் மலா்க் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, வாசனை திரவியக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வர உள்ள நிலையில், சிலிண்டா் விலை உயா்வால் ஏற்பட்டுள்ள உணவுப் பிரச்னை சுற்றுலாப் பயணிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.
இதேபோல கோடை விடுமுறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் தேவையை எதிா்கொள்ள, விலையேற்றம் ஒன்றே தீா்வாக அமையும் என்று உணவக உரிமையாளா்கள் கருதுகின்றனா். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.