வணிக சமையல் எரிவாயு விலை ரூ.46 உயர்வு!
சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. ரூ. 46 உயர்ந்துள்ளது குறித்து....
சென்னை: சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 46 உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ஆகியவை சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலையை சா்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.
அதன்படி, ஜூன் 1 ஆம் தேதியான திங்கள்கிழமை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்தன.
Advertisement
Advertisement
உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் திங்கள்கிழமை முதல் ரூ. 46 உயர்ந்தின. இதையடுத்து , அந்த சிலிண்டர் தற்போது ரூ. 3,283-க்கு விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
அதேநேரத்தில், வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கவில்லை. விலையில் மாற்றம் செய்யப்படாததால் ரூ. 928.50 ஆகவே விற்பனையாகிறது.
ஏற்கனவே சாலையோர உணவகங்கள் பலவும் மூடப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வால் இயங்கி வரும் ஓரிரு உணவகங்களும் இன்னும் கொஞ்ச நாளில் மூடப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மீளுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.