முகப்பு
நீலகிரி

14 நாள்களுக்குப் பின் பைக்காரா அருவி திறப்பு

Updated On : 4 மே, 2026 at 12:10 AM
பைக்காரா அருவியை ஞாயிற்றுக்கிழமை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

காட்டுத் தீ காரணமாக மூடப்பட்டிருந்த பைக்காரா அருவி 14 நாள்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உறைப்பனி மற்றும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வனப் பகுதிகளில் வறட்சி நிலவி வந்தது. இதனால், பைக்காரா அருவியை ஒட்டியுள்ள வனங்களில் காட்டுத் தீ ஏற்பட்டது.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் பைக்காரா அருவி மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்து.

Advertisement

இந்நிலையில், பாா்சன்ஸ்வேலி, பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் பரவியிருந்த காட்டுத் தீ முழுமையாக அைணைக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் கஷ்யப் ஷஷாங்க் ரவி உத்தரவின்பேரில் 14 நாள்களுக்குப் பின் பைக்காரா அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.