திருப்பூர்

கோயில் மரம் வேருடன் பெயர்த்து இடமாற்றம்

DIN

பெருந்துறை அருகே கோயில் அரச மரம் வேருடன் பெயர்த்து இடமாற்றம் செய்யப்பட்டது.
 பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில், விஜயகிரி வேலாயுதசுவாமி கோயில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான செயற்கை குன்று கோயிலாகும். இங்கு பழநிமலை கோயிலைப்போல் மூலவர் சிலை மேற்கு திசை நோக்கி இருப்பது தனிச் சிறப்பாகும். கோயில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோயிலில் புனரமைப்பு பணி தற்போது நடைபெறுகிறது.
 மலைக் கோயிலுக்குச் செல்லும் செயற்கை குன்றுக்கு நடுவே 60 வயதான அரசமரம் உள்ளது. மரத்தின் வேர்கள் பரவி வளர்வதால் படிக்கற்கள், குன்று சேதமடைகிறது. இதனால், மரத்தை வேருடன் பெயர்த்து வேறிடத்தில் நட கோயில் நிர்வாகம் முடிவு செய்து, மரத்தை அகற்ற மூலவர் சுவாமியிடம் உத்தரவு கேட்கப்பட்டது. உத்தரவு கிடைக்கவே அரச மரத்தைப் பெயர்க்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT