திருப்பூர்

இருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு

DIN

தாராபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவர் இருசக்கர வாகனம் மோதி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
தாராபுரம் அருகே உள்ள கொண்டரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் சலவைத் தொழிலாளி அய்யாசாமி (60). இவரது மனைவி சுசிலா. இவர்கள் அப்பகுதியில் உள்ள கன்னியாத்தாள் கோயில் அருகே சலவைத் தொழில் செய்துவந்தனர்.
இந்நிலையில், கொண்டரசம்பாளையத்திலிருந்து கன்னியாத்தாள் கோயில் பகுதிக்கு இருவரும் வியாழக்கிழமை நடந்து வந்துகொண்டிருந்தனர்.  அப்போது, ரஞ்சிதாபுரத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன்(37) தாராபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அவரது வாகனம் அய்யாசாமி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT