முகப்பு
திருப்பூர்

பழையகோட்டை மாட்டுச் சந்தை: ரூ. 22 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச்

Updated On : 25 பிப்ரவரி 2019, 10:25 am IST
பகிர்:


காங்கயம்: காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மொத்தம் ரூ. 22 லட்சத்துக்கு விற்பனையாகின.
   பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கு என மாட்டுச் சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.  
   இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 120 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், 50 மாடுகள் மொத்தம் ரூ. 22 லட்சத்துக்கு விற்பனையாகின. அதிகபட்சமாக ரூ. 87 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் மயிலை பசு விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.