கண்களை பாதுகாக்க...
இரவு படுக்கைக்குப் போகும் முன்பும் காலையிலும் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவவேண்டும்.
* கோடை காலத்தில் வெயிலில் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரம் கண்களை இறுக மூடிக்கொண்டு காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் உட்புற சூழ்நிலைக்கு ஏற்ப கண்கள் இயங்கும்.
* கண்கள் சோர்வுற்று உள்ள நேரங்களில் மெல்லிய சல்லாத் துணி ஒன்றைக் கண்களின் மீது போர்த்தி, அதன் மீது அரைத்த அல்லது வட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கிய புதிய வெள்ளரிக்காயை சிறிது நேரம் வைத்திருப்பதால், கண்கள் புத்துணர்ச்சியும் அழகும் பெரும்.
* இரவு படுக்கைக்குப் போகும் முன்பும் காலையிலும் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவவேண்டும்.
Advertisement
Advertisement
* நெல்லிக்காயை நனைய வைத்த தண்ணீரில் கண்களைக் கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட சூடு குறைந்து, கண் குளிர்ச்சி அடையும்.
-ஆர்.ஜெ.