முகப்பு
திருப்பூர்

முருங்கைக்காய் விலை சரிவு

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் கிலோ 10 ரூபாய்க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. 

Updated On : 25 பிப்ரவரி 2019, 10:26 am IST
பகிர்:


வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் கிலோ 10 ரூபாய்க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது.
வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் கொள்முதல் நிலையத்துக்கு 50 டன் முருங்கைக்காய்கள் வரத்துக் காணப்பட்டன. 
கடந்த மூன்று வாரங்களாக வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  கடந்த வாரம் கிலோ ரூ. 30க்கு விற்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை ரூ.20 குறைந்து கிலோ ரூ.10 என விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.  புதுப்பை, வெள்ளமடையிலும் முருங்கைக்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை தங்களுக்குக் கட்டுபடியாகாது என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.