ஜனவரி 25 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) நடைபெற உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) நடைபெற உள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. ஆகவே, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று குறைகளைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.