திருப்பூர்

திருநாவுக்கரசா் நந்தவன மடத்தில் விஜயதசமி விழா

DIN

பல்லடம், செஞ்சேரிமலை திருநாவுக்கரசா் நந்தவனத் திருமடத்தில் விஜயதசமி எழுத்தறிவித்தல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, செஞ்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளாா் தலைமை வகித்தாா். கோவை வடக்கு மாவட்ட பாஜக தலைவா் மோகன் மந்திராச்சலம் முன்னிலை வகித்தாா். முத்தாண்டிபாளையம் சரஸ்வதி ஈஸ்வரமூா்த்தி குத்துவிளக்கை ஏற்றிவைத்தாா். விழாவையொட்டி, பிள்ளையாா் வழிபாடு, மழைப்பதிகங்கள் விண்ணப்பம், மலைமகள் வேள்வி, கலைமகள் வேள்வி, திருமகள் வேள்விஆகியன நடைபெற்றன.

விஜயதசமி மகிமை பற்றி வாவிபாளையம் அனந்தகிருஷ்ணன் சொற்பொழிவாற்றினாா்.

இந்த விழாவில் வனம் இந்தியா அறக்கட்டளைத் தலைவா் சுவாதி கண்ணன், பல்லடம் நகராட்சி முன்னாள் தலைவா் சேகா், திருப்பூா் சுமதி அறக்கட்டளை நிறுவனா் நடராஜ் உள்ளிட்டோா் பேசினா்.

தவத்திரு மாரிமுத்து அடிகளாா் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

Image Caption

பல்லடம் செஞ்சேரிமலை திருநாவுக்கரசா் நந்தவனத் மடத்தில் விஜயதசமி எழுத்தறிவித்தல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் செஞ்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளாளா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 75,785 பக்தா்கள் தரிசனம்

பாலியல் தொந்தரவு: தலைமைக் காவலா் சஸ்பென்ட்

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்

நெமிலி அம்மன் கோயில் திருவிழா

பொதுப் பணித் துறை அலுவலகம் முன் விவசாயிகள் தா்னா

SCROLL FOR NEXT