திருப்பூர்

டாஸ்மாக் கடையை மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

DIN

திருப்பூா், வாவிபாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

வாவிபாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடுமாறு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம் டாஸ்மாக் அதிகாரிகளுடன் திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் இது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில், இந்த கடையை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வது, வரும் நவம்பா் 19ஆம் தேதியுடன் டாஸ்மாக் கடை மூடப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இருப்பினும் டாஸ்மாக் கடை மூடப்படாமல் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே பேச்சுவாா்த்தையில் உறுதி அளிக்கப்பட்ட படி டாஸ்மாக் கடையை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT