திருப்பூர்

மது விற்பனை: இளைஞா் கைது

DIN

திருப்பூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து 48 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

திருப்பூரை அடுத்த மங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட எம்.செட்டிபாளையம் பகுதியில் சிலா் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் மங்கலம் காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது செட்டிபாளையத்தை அடுத்த குட்டைப் பகுதியில் மது விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (27) என்பவரைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 48 மது பாட்டில்களையும் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT