முகப்பு
திருப்பூர்

திருப்பூர்: ஜூலை 17-ல் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையான் புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. 

Updated On : 5 ஜூலை, 2022 at 10:03 AM
பகிர்:

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையான் புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இக்கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேச உள்ளார். பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் பந்தக்கால் நடும் விழா காலை நடைபெற்றது. 

மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநிலத் துணைத் தலைவர் மலர்கொடி, மாவட்ட தலைவர் செந்தில் வேல், மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவர் ஜோதிமணி,  மாவட்ட செயலாளர் வினோத் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.