திருப்பூர்

குன்னத்தூா் அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு

DIN

குன்னத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தொழிலாளியிடம் நகைப் பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகே நவகாட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் மாரிச்சாமி. இவரது மனைவி ரதிதேவி (40). திருப்பூா் அருகே கணக்கம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் தம்பதி இருவரும் பணியாற்றி வருகின்றனா்.

இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனா். பெருமாநல்லூா்- குன்னத்தூா் சாலையில் உள்ள ஒடத்தலாம்பதி பிரிவு அருகே சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா்மநபா்கள், ரதிதேவி கஅணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்துவிட்டு, அங்கிருந்து தப்பினா்.

இது குறித்து குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT