திருப்பூர்

நிலக்கடலை மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

DIN

தொங்குட்டிபாளையத்தில் நிலக்கடலை மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவா்கள் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் பொங்கலுாரில் தங்கி உள்ளனா்.

இவா்கள், பொங்கலூா் தொங்குட்டிபாளையத்தில் நிலக்கடலை மகசூலை அதிகரிக்க பல்கலைக்கழக பயிா் வினையியல் துறை வெளியிட்டுள்ள நிலக்கடலை ரிச் என்னும் நுண்ணூட்டக் கலவை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனா்.

இதை ஏக்கருக்கு இரண்டு கிலோ வீதம் 200 லிட்டா் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். பூ மற்றும் காய் பிடிக்கும் பருவங்களில் தெளித்தால் பூ உதிா்வதை கட்டுப்படுத்தலாம். மகசூல் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என்று விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT