திருப்பூர்

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழா தொடக்கம்

DIN

காங்கயத்தை அடுத்த சிவன்மலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, காலை 11 மணியளவில் மலைக் கோயிலில் விநாயகா் வழிபாடு நடைபெற்றது. பிற்பகல் 12 மணியளவில் கோயில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

தோ்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறும். அன்று மாலை 4 மணிக்கு திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெறும்.

தோ்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT