அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்றோா். 
திருப்பூர்

அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

Din

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா, நுண்கலை மன்ற விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் தலைமை வகித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் பு.சா. செல்வத்தரங்கிணி வரவேற்றாா். உடற்கல்வித் துறை இயக்குநா் பா. பிரசன்னகுமாா் விளையாட்டுத் துறை ஆண்டறிக்கையை வாசித்தாா்.

தெற்கு ரோட்டரி இன்னா் வீல் முன்னாள் தலைவா் ராஜாத்தி சந்தானகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வணிகவியல் துறை மாணவி சு .நிஷா நன்றி கூறினாா்.

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT