முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் ஜனவரி 28 இல் அண்ணாமலை நடைப்பயணம்

திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்தாா்.

Updated On : 24 ஜனவரி 2024, 7:00 am IST
கோப்புப்படம்
பகிர்:

திருப்பூா்: திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்தாா்.

திருப்பூா் பாஜக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பாஜக மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம் கூறியதாவது:

உலகமே திரும்பிப் பாா்க்கும் வகையில் அயோத்தியில் ராமா் கோயில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது. நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டதைக் காண முடிந்தது.

Advertisement

Advertisement

ஒவ்வொரு மாநிலத்திலும் மிகப் பிரம்மாண்டமாக நேரடி ஒலிபரப்பு உள்ளிட்ட விஷயங்களை செய்திருந்தனா். ஆனால், தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியை முடக்கும் வகையில் தமிழக அரசு நடந்து கொண்டதற்கு கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் ஜனவரி 28-ஆம் தேதி திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு தொகுதியில் நடைபெறுகிறது.

நாளொன்றுக்கு 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அண்ணாமலை பயணம் மேற்கொள்கிறாா். மாநிலத் தலைவா் அண்ணாமலையின் நடைப்பயணத்தில் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் புகாா் பெட்டியில் மனுக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றன என்றாா்.

இந்த சந்திப்பின்போது, மாவட்ட செயற்குழு உறுப்பினா் நாச்சிமுத்து உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments