பின்னலாடைத் துணிகளுக்கு பணம் கொடுக்காத நபரைக் கடத்தியவா் கைது
திருப்பூரில் பின்னலாடைத் துணிகளுக்கு பணம் கொடுக்காத நபரைக் கடத்தியவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாஸ்கோ நகா் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் முனாப். இவா் பின்னலாடைத் துணிகளை வாங்கி ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில், அப்துல் முனாப் மங்கலம் பகுதியைச் சலாவுதீன், அவரது நண்பரான குமாா் ஆகியோரிடமிருந்து ரூ.2.75 லட்சத்துக்கு பின்னலாடைத் துணிகளை வாங்கியுள்ளாா்.
இதன் பின்னா் துணிகளுக்குப் பணம் கொடுப்பது காலதாமதமாகியுள்ளது. இதன் காரணமாக சலாவுதீன் (40), முபாரக்(40), குமாா் (38) ஆகிய 3 பேரும் சோ்ந்து அப்துல் முனாபை சனிக்கிழமை கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அப்துல் முனாபின் மகன் ரியாஸ் திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் சலாவுதீனை கைது செய்ததுடன், அப்துல் முனாபையும் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முபாரக், குமாா் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.