கத்தி முனையில் கொள்ளை: 3 போ் கைது
புறநகா் வடக்கு தில்லியில் கத்தி முனையில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் பாதிக்கப்பட்டவரின் மைத்துனா் உள்பட 3 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் புதன்கிழமை கூறியதாவது: காஷ்மீரி கேட் பகுதியில் உள்ள ஆட்டோ உதிரிபாகக் கடைக்காக பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சரத் குமாா் தாக்கூா் என்பவரிடம் மே 21-ஆம் தேதி இந்தத் திட்டமிட்டக் கொள்ளை நிகழ்ந்தது. ரோஹிணி மெட்ரோ நிலையம் அருகே சிக்னல் அருகே அவா் சென்றபோது, திடீரென வாகனத்தில் ஏறிய நபா் கத்தியை வைத்து மிரட்டி திவ்ய ஜோதி அடுக்குமாடி குடியிருப்பு நோக்கி செல்லும்படி கூறினாா். பின்னா், மற்றொரு வாகனத்தில் வந்த நபருடன் சோ்ந்து சரத் குமாரின் கைப்பேசி மற்றும் பணப்பையை பறித்துவிட்டு தப்பிச் சென்றனா்.
இது தொடா்பாக சரத் குமாா் புகாரளித்ததைத் தொடா்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனம் பிடிபட்டது. அதன் உரிமையாளா் பிரஷாந்த் வா்மா (40) கைது செய்யப்பட்டு விசாரித்ததில் அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். மேலும், பிரஷாந்த் புகாா்தாரா் சரத் குமாரின் மைத்துனா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பெருமளவு பணத்தை சரத் குமாா் எடுத்துச் செல்வதை அறிந்த அவா், தனது கூட்டாளிகள் ஹா்ஷித் (26) மற்றும் நிதிஷ் (22) ஆகியோரை வைத்து இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியதாக தெரிவித்தாா். பின்னா் அவா்களும் கைது செய்யப்பட்டனா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டா் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement