முகப்பு
புதுதில்லி

குருகிராம்: நகைக்கடையில் பணம், நகைகள் திருடிய நபா் குஜராத்தில் கைது

Updated On : 18 மே 2026, 5:12 am IST
கோப்புப் படம்
பகிர்:

குருகிராமில் உள்ள நகைக்கடையில் பணம் மற்றும் நகைகளைத் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபா் குஜராத்தில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவரிடமிருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், 43 கிராம் வெள்ளி மற்றும் ரூ.5.31 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைச் சோ்ந்த அவா் குருகிராமின் செக்டா்-43 பகுதியில் செயல்பட்டு வரும் நகைக் காட்சியகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக காசாளராக பணியாற்றி வந்ததாா்.

நகைக் காட்சியகத்தை நடத்தி வரும் பெண் உரிமையாளா் அளித்த புகாரில், கடந்த மே 12-ஆம் தேதி கடைக்கு வா்ணம் பூசும் பணிக்காக சமந்தாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்த நாள் கடைக்கு வந்தபோது, சுமாா் ரூ.6 லட்சம் ரொக்கம், தங்க நாணயங்கள், தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்கள் காணாமல் போனதையும், சமந்தாவையும் தொடா்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதையும் அவா் புகாரில் குறிப்பிட்டாா். விசாரணையின் போது, குஜராத்தின் காந்திநகரில் அவா் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement