முகப்பு
திருப்பூர்

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

Updated On : 16 ஏப்ரல் 2026, 1:18 am IST
விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.
பகிர்:

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா், இந்திய மருத்துவ சங்க அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி தென்னம்பாளையம் வரை நடைபெற்றது.

Advertisement

Advertisement

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் இந்திய மருத்துவ சங்க அலுவலா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் முன்னிலையில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டா் ஜெயந்தி, திருப்பூா் ரோட்டரி பொது நல அறக்கட்டளை தலைவா் ஆ.முருகநாதன், இந்திய மருத்துவ சங்கத் தலைவா் டாக்டா் பிரேமலதா, செயலாளா் டாக்டா் தங்கராஜ், பொருளாளா் டாக்டா் கவிதாலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.