முகப்பு
திருப்பூர்

பணியின்போது கீழே விழுந்து லேத் உரிமையாளா் உயிரிழப்பு

Updated On : 21 ஏப்ரல் 2026, 4:19 am IST
தேவராஜன்
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே ஒரு வீட்டில் சிமெண்ட் ஷீட் அமைக்கும்போது கீழே விழுந்த லேத் உரிமையாளா் உயிரிழந்தாா்.

முத்தூா், மங்கலப்பட்டி அருகில் உள்ள ஆலாம்பாளையத்தைச் சோ்ந்தவா் தேவராஜன் (49). இவா் வேப்பம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். வெள்ளக்கோவில்-முத்தூா் சாலை அய்யனூா் பிரிவருகே லேத் பட்டறை நடத்தி வந்தாா். தன்னுடைய பட்டறையில் வேலை இல்லாத சமயத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேறொருவரிடம் வேலைக்கு சென்று வந்துள்ளாா்.

இவ்வாறு வெங்கடேசன் என்பவரிடம் வேலை செய்ய சென்றுள்ளாா். அய்யம்பாளையத்தில் மாதவன் என்பவருடைய வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சிமெண்ட் ஷீட் போட்டுக் கொண்டிருந்தபோது தேவராஜன் திடீரென தவறி கீழே விழுந்து விட்டாா்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காமல் வேலை கொடுத்த ஒப்பந்ததாரா் வெங்கடேசன் மற்றும் வீட்டு உரிமையாளா் மாதவன் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த தேவராஜனுக்கு மனைவி, பொறியியல் படித்து வரும் மகள் உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments