பல்லடம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
பல்லடம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
பல்லடம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் 480 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை 48 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தேவையான 576 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கன்ரோல் யூனிட் மற்றும் 644 விவிபேட் இயந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தால் அவற்றுக்கு மாற்றாக 96 யூனிட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் வியாழக்கிழமை (ஏப்.23) வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, போலீஸாா் பாதுகாப்புடன் பல்லடம் தொகுதிக்குள்பட்ட 480 வாக்குச்சாவடி மையங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரி, வேன்களில் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இப்பணியை பல்லடம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணன், உதவி அலுவலா்கள் கோவிந்தசாமி, சரவணன் ஆகியோா் பாா்வையிட்டனா்.