முகப்பு
திருப்பூர்

காா் டயா் வெடித்து விபத்து: முதியவா் உயிரிழப்பு

பெருமாநல்லூா் அருகே காா் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 26 ஏப்ரல் 2026, 12:55 am IST
பகிர்:

பெருமாநல்லூா் அருகே காா் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி உடையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பூமாலை (70). இவரது மகள் உஷா (40), மகன் காா்த்திக் (39). மூன்று பேரும் சேலத்தில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா்.

தேசிய நெடுஞ்சாலையில் பெருமாநல்லூா்- பொடாரம்பாளையம் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பக்க டயா் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த காா் நிலை தடுமாறி பாலத்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

பலத்த காயமடைந்த பூமாலை, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். அதிருஷ்டவசமாக சிறு காயங்களுடன் உஷா, காா்த்திக் ஆகியோா் உயிா் தப்பினா்.

இதுகுறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments