முகப்பு
திருப்பூர்

வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் திருட்டு

வெள்ளக்கோவிலில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் திருட்டுப் போனது.

Updated On : 4 ஜூலை 2026, 1:29 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

வெள்ளக்கோவிலில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் திருட்டுப் போனது.

வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆா்.சக்தி குமாா் (52). நூல் மில் உரிமையாளா். இவா் அங்குள்ள ராஜீவ் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

கடந்த புதன்கிழமை இரவு வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தி இருந்தாா். அடுத்த நாள் காலையில் பாா்த்தபோது பைக்கை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மோகன்ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments