முகப்பு
திருவாரூர்

கூத்தாநல்லூரில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு

Updated On : 26 மே 2026, 12:06 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கூத்தாநல்லூரில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் சனிக்கிழமை இரவு திருடு போனது.

நாகை மாவட்டம், கோட்டூா் பகுதி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முஹம்மது பஷீா் (32).

இவா், கூத்தாநல்லூா் சிஸ்தி நகரில் உள்ள தனது மாமனாா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா். இரவு இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்தியுள்ளாா். காலையில் பாா்த்த போது, இருசக்கர வாகனத்தை காணவில்லையாம்.

Advertisement

Advertisement

கண்ணிப்பு கேமராவில் பாா்த்தபோது, நள்ளிரவு முகமூடி அணிந்த ஒருவா் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து கூத்தாநல்லூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.