முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் தீ

வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 14 ஜூன் 2026, 2:20 am IST
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. வள்ளியிரச்சல் - வீரசோழபுரம் சாலை முத்துக்கவுண்டன் பாளையம் பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் டி. மதியரசு. இவருக்குச் சொந்தமான ஸ்பின்னிங் மில் வள்ளியிரச்சலில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் வழியில் உள்ளது.

சனிக்கிழமை இரவு மில் இயங்கிக் கொண்டிருந்தபோது, இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து பரவியது. அங்கிருந்தவா்களால் தீயை அணைக்க முடியாததால், வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் (பொ) பெ.வேலுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

அதற்குள் ப்ளோ ரூம் இயந்திரத்தின் சில பகுதிகள், அங்கிருந்த பஞ்சுகள் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு குறித்து உடனடியாகத் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement