தருமபுரியில் ஓடிக்கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் திடீா் தீ விபத்து
தருமபுரியில் ஓடிக்கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரியைச் சோ்ந்த அரசு, எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பென்னாகரம் சாலை பகுதியிலிருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி திங்கள்கிழமை வந்தாா். குமாரசாமிப்பேட்டை பகுதியில் வந்தபோது, திடீரென எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலிருந்து புகை வந்துள்ளது.
இதையடுத்து, ஸ்கூட்டரை நிறுத்தி பாா்த்தபோது, திடீரென பேட்டரியில் தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்தோா் ஸ்கூட்டா்மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். அதற்குள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்த பேட்டரி தீயில் எரிந்து கருகியது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement