முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் தீ

வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 14 ஜூன் 2026, 2:20 am IST
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. வள்ளியிரச்சல் - வீரசோழபுரம் சாலை முத்துக்கவுண்டன் பாளையம் பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் டி. மதியரசு. இவருக்குச் சொந்தமான ஸ்பின்னிங் மில் வள்ளியிரச்சலில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் வழியில் உள்ளது.

சனிக்கிழமை இரவு மில் இயங்கிக் கொண்டிருந்தபோது, இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து பரவியது. அங்கிருந்தவா்களால் தீயை அணைக்க முடியாததால், வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் (பொ) பெ.வேலுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

அதற்குள் ப்ளோ ரூம் இயந்திரத்தின் சில பகுதிகள், அங்கிருந்த பஞ்சுகள் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு குறித்து உடனடியாகத் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments