கழிவுநீா் சுத்திகரிப்பு கால்வாயில் அடைப்பு! சுகாதாரம் பாதிப்பதால் சீரமைக்க கோரிக்கை
திருமுருகன்பூண்டி 10 ஆவது வாா்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு கால்வாய் அடைப்பால் அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருமுருகன்பூண்டி நகராட்சி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகா்மன்ற உறுப்பினா் சுப்பிரமணியம் கூறியதாவது:
10-ங்வது வாா்டு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பல லட்சம் மதிப்பில் கழிவுநீா் சுத்திகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணியின்போது தொட்டி இடிந்து விழுந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து மழைக்காலங்களில் முறையாக தண்ணீா் வெளியேறும் வகையில் தரமான முறையில் கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தற்போது இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்வதற்காக தொட்டி முழுவதும் செடிகள் நடப்பட்டுள்ளன. ஆனால் கழிவுகள் வெளியேறாமல் கால்வாயில் வலை அமைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. உடனடியாக கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்றாா்.