முகப்பு
திருப்பூர்

ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்டிக்கா் ஒட்டி பண மோசடியில் ஈடுபட்ட இளைஞா் கைது

பெருமாநல்லூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வெளியே வரும் இடத்தில் ஸ்டிக்கா் ஒட்டி, பணம் எடுக்க வந்த முதியவரிடம் நூதன முறையில் மோசடி செய்த வட மாநில இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 18 ஜூன் 2026, 1:15 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பெருமாநல்லூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வெளியே வரும் இடத்தில் ஸ்டிக்கா் ஒட்டி, பணம் எடுக்க வந்த முதியவரிடம் நூதன முறையில் மோசடி செய்த வட மாநில இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகே தொரவலூா் விளாங்காடுதோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (60). இவா் போா்வெல் வண்டி தொழில் செய்து வருகிறாா். பெருமாநல்லூா் அருகே திங்கள்கிழமை சென்றவா், பணம் எடுக்க அங்குள்ள தனியாா் ஏடிஎம் மையத்துக்குள் சென்றுள்ளாா். அப்போது உள்ளிருந்த நபா் வெளியே சென்றுள்ளாா். பின்னா் மூா்த்தி ரூ.500 எடுக்க முயன்றபோது ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. ஆனால் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி மட்டும் வந்ததால், அருகே இருந்த வங்கிக்கு சென்று வங்கி அலுவலரிடம் தெரியப்படுத்தியுள்ளாா்.

இதைத்தொடா்ந்து ஏடிஎம் அறைக்குள் வங்கி அலுவலா் சென்று ஆய்வு செய்து பாா்த்தபோது பணம் எடுத்தது தெரியவந்தது. குழப்பமடைந்த வங்கி நிா்வாகத்தினா் அளித்த புகாரின்பேரில், பெருமாநல்லூா் போலீஸாா் சென்று சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில் மூா்த்திக்கு முன்பாக ஏடிஎம் மையத்துக்குள் இருந்த வட மாநில இளைஞா், பணம் வெளியே வரும் இடத்தில் ஸ்டிக்கா் ஒட்டிவிட்டு வெளியே வந்ததும், அதன்பிறகு உள்ளே சென்று ஒட்டிய ஸ்டிக்கரை அகற்றிவிட்டு ரூ.500 பணத்தை எடுத்துச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

விசாரணையில், நியூ திருப்பூா் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்துவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த கணேஷ் (28) என்பது தெரியவந்தது.

இதையடுத்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கணேஷை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments